45 நாட்களில் தமிழ் வாசிப்பு மற்றும் எழுதுதல்.

மிக உயர்ந்த தரமான கல்வியை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம், உங்கள் குழந்தையின் வெற்றியை அறிவு மற்றும் வளங்களின் நன்கு வடிவமைக்கப்பட்ட உள்கட்டமைப்புடன் கட்டுப்படுத்துகிறோம்.

தமிழ்மொழிக் கற்றல் ஓர் அறிமுகம்.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் மொழியைப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டிருந்தாலும் அனேகர் கூறக்கூடிய காரணம் தமிழ் மொழியில் படிக்க, எழுத மிகவும் கடினமானது அதிக எழுத்துகள் கொண்டது எனும் தவறான கருத்தை தன்னகத்தே கொண்டு நினைப்பதுவே ஆகும்.

இத் தவறான கருத்தை தகர்த்தெறியவே தொல்காப்பியமும் நன்னூலும் ஒரு நல்ல வழிகாட்டியாகச் செயல்பட்டு அடிப்படைக் கருத்துக்களைத் தெளிவாகக் கொடுத்துள்ளது.

மொழிக்கு முதல் எழுத்துக்கள் 31 ஆகும். அவையாவன உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 ஆயுத எழுத்து 1 ஆகும் இவ்வெழுத்துகள் சேர்ந்து பிற எழுத்துகள் பிறக்கிறது.

ஒலிவடிவத்திலிருந்து தான் வரிவடிவம் எழுதப்பட்டது. நாம் வரி வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒலி வடிவத்தை மறந்ததன் விளைவே தமிழ் மொழி படிக்க எழுத கடுமையானது என்பதாகும்.

குறிப்பாக இன்றைய தலைமுறையிடம் அதிகமாக மொழி கடினமானது எனும் என்னும் ஏற்படுகிறது.

வரிவடிவத்தின் பெயர்களைக் கற்பித்து ஒவ்வொரு எழுத்திற்கும் சரியான உச்சரிப்பைக் கற்பித்தால் தமிழ்மொழிபோல் படிக்க எழுத எளிய மொழி வேறு இல்லை என்பது உறுதியாகும்

ஏன் சிவசக்தி தமிழ்ப்படிப்பகம்

தாய்மொழி தமிழ் மொழி

தாய் சொல்லித்தராத செய்திகள் அனைத்தையும் தாய்மொழி சொல்லித்தரும். ஒருவருக்கு உயிரை விட மேலானது ஒன்று இருக்குமென்றால் அது அவரின் தாய் மொழியே ஆகும் . தாய்மொழியை நம் முன்னோர்கள் செம்மொழி, மருத்துவ மொழி , தெய்வ மொழி போன்ற பல பெயர்களைக் கொண்டு அழைத்தார்கள். அவர்கள் இட்ட பெயர் அனைத்திற்கும் பொருத்தமான மொழி நம் தமிழ்மொழியே ஆகும்.

இப் பெருமைக்குரிய தமிழ் மொழியை உலகமெங்கும் தமிழ் படிக்க விரும்புவர்களுக்கு தெளிவாக , விரைவாக, எளிமையாக , புதுமையாகப் படிக்கவும் எழுதவும் செய்வதற்காக உருவாக்கப்பட்டதே சிவசக்தி படிப்பகம் ஆகும்.

45 நாட்களில் கற்றுக்கொள்ளுங்கள்

எங்கள் படிப்பகத்தின் மூலமாக அடிப்படைத் தமிழை எளிமைப்படுத்தாது தமிழைத் தமிழாகவே படிக்க இயலும். ஏனெனில் தமிழைத் தமிழாகப் படித்தால் தமிழ் எளிது .

தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் எங்களது பதிப்பகத்தின் மூலம் 45 நாட்களில் விரைவாக வாசிக்கவும் பிழையின்றி எழுதவும் செய்வார்கள் என்பது உறுதியாகும். அனைவரும் தமிழ் மொழியைப் படிக்கவும் பரப்பவும் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டதே சிவசக்தி தமிழ்ப்படிப்பகம்.

முனைவர் மு.கனகலட்சுமி

DTE , B.lit , M .A ,T.P.T , B.ED , PH.D.

பணி
இடைநிலை ஆசிரியர் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி புல்லா அவென்யூ செனாய் நகர் சென்னை-600040

ஆசிரியர் பணி அனுபவம்- 24 ஆண்டுகள்

இடைநிலை ஆசிரியர் பணி – 17 ஆண்டுகள்

ஆசிரியர் பயிற்றுனர் – 3 ஆண்டுகள்

தலைமை ஆசிரியர் பணி அனுபவம் – 4 ஆண்டுகள்.

கலந்துகொண்ட சார்க் மாநாடு

நேபாளம் இலங்கை இந்தியா கலந்து கொண்ட பன்னாட்டுக் கருத்தரங்கம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பாரீசு ஆகிய நாடுகள்.

ஒரு பார்வையில்

- ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்திய விவரம்.

- தமிழ்நாட்டில் 10 000 ஆசிரியருக்கும் மேலாக

- அட்லாண்டா நாட்டில் 35 ஆசிரியர்களுக்கு

- மலேசியா நாட்டில் 50 ஆசிரியர்களுக்கு

- லண்டன் ஆஸ்திரேலியா, நார்வே , தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிலருக்குப் பயிற்சி கொடுத்துள்ளேன்.

பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்கள் விபரம்

- லண்டனில் ஐந்து குழந்தைகள்
- ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை

- தமிழ்நாட்டில் 500 குழந்தைகளுக்கும் மேலான குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்துள்ளேன்.

- எத்தனை வருடங்கள் தாய்மொழியான தமிழை பிழையாகவே எழுதிப் பழகி இருந்தாலும் எனது பயிற்சியின் மூலம் ஒரு மணி நேரத்தில் பிழையின்றி எழுதப் பயிற்சி அளிக்கிறேன்.

எனது நோக்கம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமே . தவிர்க்க முடியாத சில காரணங்களால் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறேன்

மாணவர்களின் கருத்து

Play Video

“சிவசக்தி தமிழ் படிப்பகத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் பிழையின்றி தமிழ் எழுதிய மாணவியின் பின்னோட்டம்”  – அ. அன்னே கிரேசியா, மாணவி

Play Video

“சிவசக்திபதிப்பகத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் முற்றிலும் எழுத்து பிழை இல்லாமல் எழுதக் கற்ற மாணவி” – எம்.பெர்னிஸ் பாலா, மாணவி

ஏனென்றால் நீங்கள் கற்றுக்கொள்ள தகுதியானவர்.

இப்பொழுதே பதிவு செய்யுங்கள்